10 குடும்பங்களை ஒன்றிணைத்த கோழி வளர்ப்புத் திட்டம்
Bright Future International நிறுவனமானது முல்லைத்திவு வேணவில் கிராமத்தில் வறுமையில் வசிக்கும் 10 வறிய குடும்பங்களை ஒன்றிணைத்து அவர்களுடைய வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் 300 இறைச்சிக் கோழி வளர்ப்புத் திட்டத்தினை ரூபா 316020 ற்கு ஏற்படுத்திக் கொடுத்தது.
இக்கிராமத்தில் வசிக்கின்ற குடும்பங்களின் சமூக பொருளாதார கல்வி நிலை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதனை கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இக்கிராமத்தின் நிலையினை ஆராய்ந்த நிலையில் இவர்களுக்கான இத்திட்டம் அமைத்துக் கொடுப்பதாக தீர்மானிக்கப்பட்டு இத்திட்டம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இதற்கான கூடு ஒன்றை அமைத்துக் கொடுத்ததோடு 200 கோழிக் குஞ்சுகள், உணவு மற்றும் பாத்திரங்கள் அனைத்தையும் Bright Future International நிறுவனமானது பெற்றுக் கொடுத்தது.
இதனை புதுக் குடியிருப்பு மேற்கு கிராமசேவகர் திரு பு. கயகோகுலன் அவர்கள்07.07.2021 இக் குடும்பங்களுக்கு கையளித்து வைத்தார். இக் திட்டத்தினை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட கிராம சேவகர் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள், மக்கள் அனைவர்க்கும் Bright Future International நிறுவனமானது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதோடு, தொடர்ச்சியாக வறிய மக்களின் துயர் துடைக்க உதவுகின்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் Bright Future International நிறுவனமானது நன்றியினைத் கொள்கின்றது.