ஒன்றிணைந்த விவசாயத் திடத்திற்காகன நீர் இறைக்கும் இயந்திரம் பெற்றுக் கொடுக்கப்பட்டது.
உடையர்கட்டு முல்லைத்தீவு பகுதியில் வசிக்கின்ற 3 குடும்பங்களை ஒன்றிணைத்த விவசாயத் திட்டத்திற்கான முயற்சியாக இத்திட்டத்திற்கான நீர் இறைக்கும் இயந்திரம் பெற்றுக் கொடுக்கப்பட்டது. கடந்த மாதம் அரசன் நடராசா என்பவருக்கு விவசாயத் தொழிலினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக குழாய்க் கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது.
இவருடன் மூன்று குடும்பங்களை ஒன்றிணைத்து விவசாயத் திட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டு இதற்கான நீர் வழங்கலுக்கான நீர் இறக்கும் இயந்திரம் ஒன்று ரூபா 48450 இற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் மூன்று குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.