வந்தாறுமூலை மட்டக்களப்பில் கல்விகற்கும் மாணவிக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டது.
சே.லதா குடும்பமானது கணவனால் கைவிடப்பட நிலையில் மூன்று பிள்ளைகளுடன்வந்தாறு மூலை, மட்டக்களப்பில் மிக வறுமையில் வசித்து வருகின்றது. இவரது இரு பிள்ளைகள் மிகவும் கஸ்ரத்தின் கல்வி கற்கும் நிலையில் இவர் கூலித் தொழிலிற்கு வாழ்க்கையினை நடத்தி வருகின்றார். இந்த நிலையில் இரு பிள்ளைகளும் 2 மைல்களுக்கு நடந்தே பாடசாலைக்கு செல்லவேண்டிய சுழலில் இருப்பது எமது நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
எனவே இவரர்களது பிள்ளைகளின் கல்வித் தேவையினை கருத்திலெடுத்து இக் குடும்பத்திற்கான துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டது. இக் குடும்பத்திற்குரிய துவிச் சக்கர வண்டியினை வழங்குவதற்குரிய நிதியினை நோர்வே நாட்டிலிருந்து வழங்கிய திரு மோகன் சிவானந்தன் அவர்களுக்கு Bright Future International நிறுவனம் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.