தியாகராசா ஜெயக்குமார் என்பவருக்குரிய வாழ்வாதாரமாக ஆடு வளர்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
இவரது குடும்பமானது கரவெட்டிப் பகுதியில் கல்விகற்கும் இரு பிள்ளைகளுடன் வறுமையில் வசித்து வருகின்றது. இவரது கல்விகற்கும் நிலையில் பாடசாலைக்கு நீண்ட தூரம் நடந்தே செல்லவேண்டியுள்ளது, அத்துடன் இவரது உடல் விழுப்புண் அடைந்த நிலையில் உள்ளதால் இவரால் கடினமான வேலைகள் ஏதும் செய்ய முடியாமையினால் கூலி வேளைக்கு சென்று கிடைக்கின்ற சிறு நிதியினைக் கொண்டே இவரது குடும்பத்தினையும் பிள்ளைகளின் கல்வியினையும் கவனித்து வருகின்றார்.
எனவே இக்குடும்பத்திற்குரிய வாழ்வாதாரம் ஏற்படுத்தி கொடுப்பதாக தீர்மானிக்கப்பட்டு ஆடுவளர்பதற்குரிய கொட்டகை மற்றும் ஆடுகளும் ரூபா 130 000 இற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டது. இதற்குரிய நிதியினை பிரித்தானியாவிலிருந்து வழங்கிய திரு பிரபாகரன் ( பிரபா) தனபாலசிங்கம் அவர்களுக்கு Bright Future International நிறுவனம் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.