நந்தன் மனோகரன் என்பவரது குடும்பத்திற்கு கிணறு அமைத்துக் கொடுக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
மறையிலுப்பை நெடுங்கேணிப் பகுதியில் வசித்துவரும் மனோகரன் நந்தனுடைய குடும்பமானது இரண்டு பிள்ளைகளுடன் வறுமையில் வசித்து வருகின்றது. இவர் போரில் ஒருகண்ணை இழந்து உடலில் பலத்த காயங்களுடன் கூலி வேலை செய்து மிகவும் வறுமையில் வாழ்ந்து வருகின்றார். இவரது ஒற்றைக்கண் இல்லாத நிலையில் அதிக வெய்யிலினில் வேலை செய்வதனால் மற்றைய கண்ணும் தொடர்ச்சியாக கலங்குவதனால் மற்றைய கண்ணும் பார்வையை இழக்கும் நிலையில் உள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ள நிலையில் எமது அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளார். இவரது ஒரு பிள்ளையையும் நடக்க முடியாத நிலையில் உள்ளதால் பழைய துவிச்சக்கர வண்டியும் அடிக்கடி பழுதடைவதால் பாடசாலையிற்கு பிள்ளைகளை பல் நேரங்களை சுமந்து கொண்டே செல்ல வேண்டியிருப்பதாக கூறுகின்றார். அத்தோடு இவரது இயலாத பிள்ளையின் கால்களை குணப்படுத்த முடியுமென வைத்தியர்கள் கூறியுள்ள போதும் அதற்குரிய நிதி வசதி இல்லாதுள்ளதாக கூறுகின்றார்.
எனவே இவர்களது குடி நீர் தேவை மற்றும் வாழ்வாதாரத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது. எனவே இவர்களது வாழ்வாதாரமாக விவசாயத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவும் குடி நீர் தேவையினை பூர்த்தி செய்வதற்காகவும் ரூபா 300 000 அனுப்பி வைக்கப்பட்டு கிணறு அமைத்துக் கொடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.