தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வுவிற்கான உதவி வழங்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டு பளைக் கோட்டத்திற்குப்பட்ட பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த 33 மாணவர்களை பாராட்டி கெளரவிப்பதற்காக கல்விக் கோட்ட கல்வி அலுவலகத்திடமிருந்து உதவி கோரப்படடிருந்தது.
இந்நிலையில் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகளை தொடர்புகொண்டு இதற்கான நிதி உதவி பெறப்பட்டு முதற்கட்டமாக ஒவ்வொரு மாணவர்களுக்கும் வாங்கி கணக்கு ஆரம்பிக்கப்பட்டு அதில் தலா 5000 ரூபா வைப்பிலிடப்பட்டது.
அத்துடன் இம் மாணவர்களை கெளரவிப்பதற்காகன நிகழ்வு 04.12.2021 சனிக்கிழமை வேம்பெடுகேணி ஆரம்பப்பாடசாலையில் நடைபெற்றது.
இதற்கான ஒரு பகுதி நிதியினை பழைய மாணவர்கள் சிலர் வழங்கியிருந்ததுடன் மிகுதி நிதியினை Bright Future International நிறுவனமானது வழங்கியிருந்தது. இவ்வாறாக மொத்த நிதியாக ரூபா 256000 வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வு பயனுடையதாக அமைவதற்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் Bright Future International நிறுவனமானது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது. அத்துடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், வடமாகாண பிரதிக் கல்விப்பணிப்பாளர், வலையாக கல்விப்பணிப்பாளர், முன்னாள் கோட்டக்கல்விப்பணிப்பாளர், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த நிகழ்விற்கு BRIGHT FUTURE INTERNATIONAL நிறுவனத்திற்கூடாக உதவியவர்கள்.
Nirjanan Kasippill (Jena) (U.K) £150
Nadesapillai Kantharuban (U.K) £50
Pirabakaran T (U.K) £ 30
David Alfred (U.K ) £100
Jacob Arulthason (Santhan) £50
Anita Joicy (Reeta) Peter Arulthas (U.K) £50
S. Stanis (Kadson) (U.K) £50
Kunam Jhonson (U.K) £50
Santhiyapillai Jentas (Mathy) £50
Mariya Peter (Puspam) Kanthy (Canada) £ 55.72 Canadian dollars
Rasammah Teacher (sl rubies 20000)