மாங்குளம் நல்லாயன் இல்லத்தில் பராமரிக்கப்படுகின்ற ஆதரவற்ற சிறுவர்களுக்கான உணவு வழங்கி வைக்கப்பட்டது.
சச்சிதானந்தன், கணேசலிங்கம், தவயோகமலர் மற்றும் முன்னோர்கள் நினைவாக பிரித்தானியாவில் இருந்து திரு காந்தன் அவர்கள் வழங்கி வைத்தார். இதற்கான நிதியாக ரூபா 23000 வழங்கப்பட்டு (31.01.2022) மதிய போசன உணவு வழங்கி வைக்கப்பட்டது.
இவ்வுதவியை வழங்கிய திரு காந்தன் குடும்பத்தினருக்கு Bright Future Intentional நிறுவனமானது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது.
உறவுகளே
உங்களது பிறந்த தினம், திருமண நாள், மற்றும் ஏனைய நினைவு தினங்களில் இவர்களைப் போன்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிட விரும்பினால் அதற்கான ஒழுங்குகள் ஏற்படுத்தித் தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.