பீதாம்பரம் பிறேமச்சந்திரன் குடும்பத்திற்கனா வாழ்வாதார உதவியாக குளிரூட்டி வழங்கப்பட்டது.
இவரது குடும்பமானது கைவேலி புதுக்குடியிருப்பு பகுதியில் கல்விகற்கும் இரு பிள்ளைகளுடன் வசித்துவருகின்றது. இவரும் இவரது மனைவியும் போரால் பாதிக்கப்பட்டு இயலாத நிலையிலும் கூலி வேலைக்கு சென்றே இக் குடும்பத்தின் தேவைகள் மிக கஸ்ரத்தின் மத்தியில் ஓரளவு பூர்த்தி செய்யப்படுகின்றது.
எனினும் இவரது பிள்ளைகளில் ஒருவருக்கு உயர்தரம் கற்று வருகின்றமையும் , மற்றவருக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்தும் தொடர்ந்தும் இப் பிள்ளைகளை கல்வி கற்பிப்பதற்கு இக் குடும்பத்தினால் முடியாத நிலையில் பிள்ளைகளின் கல்வி செலவினை பொறுப்பெடுக்குமாறு உதவி கோரப்பட்டது.
எனவே இக் குடும்பத்திற்கான வாழ்வாதாரத்தினை மேம்படுத்து முகமாக 11000 ரூபா வழங்கப்பட்டு 10.02.2022 அன்று இவர்களுக்கான குளிர்சாதனப் பெட்டி பெற்றுக் கொடுக்கப்பட்டது.
இதற்கான நிதியினை பிரித்தானியாவில் இருந்து வழங்கிய திருமதி இராஜலட்சுமி மயில்வாகனம், (திரு நடேசன் மயில்வாகனத்திற்கும் Bright Future International நிறுவனமானது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.
இவரது குடும்பமானது வருடந்தம் ஒரு குடும்பத்திற்கான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்திக் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
உறவுகளே உங்களது ஊரிலோ அல்லது ஏனைய இடங்களிலோ உள்ள குடும்பங்களுக்கான வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொடுக்க விரும்பினால் எம்மிடம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.