கதிரவெளி, வெருகல் பிரதேசத்தில் வசிக்கும் 12 வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதரத்திற்காக கோழி வளர்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு கதிரவெளி வெருகல் பிரதேச மக்கள் மிக வறுமையில் வாழ்ந்து வரும் நிலையில் இவர்களுக்கான வாழ்வாதாரம் ஏற்படுத்திக் கொடுத்தப்பட்டது.
இக்கிராமத்தில் கோழி வளர்பதற்கு 12 குடும்பங்கள் இனங்காணப்பட்டு கோழிக் கூடுகள் அமைக்கப்பட்டு முதற் கட்டமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்துக் கோழிகள் வழங்கி வைக்கப்பட்டது.
ஒரு நேர உணவிற்கே வழியின்று இவர்கள், உணவுத் தேவைக்காக கல்லுடைத்தல், காட்டுப் பழங்களை பறித்து அவர்க தெருவோரங்களில் வைத்து விற்றல். தேன் எடுத்தல், வேட்டையாடுதல், போன்றவற்றில் இருந்து கிடைக்கும் சிறிய வருமானத்தைக் கொண்டே இவர்களது உணவும் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே இன் கிராமத்தினை முற்று முழுதாக பொறுப்பெடுத்து இக்கிராம மக்களின் வாழ்வாதம், கல்வி , போன்றவற்றில் முன்னேற்றுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இக்கிராம மக்களுக்கான உடுப்புகள் மூன்று தடவைகள் அனுப்பி வைக்கப்பட்டு வழங்கப்பட்டது. அத்துடன் இக் கிராம மக்கள் ஆற்றுநீர் மற்றும் மழைநீரை பயன்படுத்தி வரும் நிலையில் பயன்படுத்தி வரும் நிலையில் இக்கிராம மக்களுக்குரிய குடிநீர் தேவையினை பூர்த்தி செய்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டங்களை சிறப்பான முறையில் முன்னெடுப்பதிற்கு உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் , வர்த்தக நிலைய உரிமையாளர்கள் , பணியாளர்கள் அனைவற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். குறிப்பாக 5 குடும்பங்களுக்குரிய வாழ்வாதாரத்திற்கான கோழி வளர்பிற்கு பிரத்தினியாவிலிருந்து உதவிய திரு சஜீவன் கந்தசாமி அவர்களது குடும்பத்தினற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்
உறவுகளே இக்கிராமத்திற்கான குடிநீர் தேவையினை பூர்த்தி செய்வதற்கான திட்டத்தினை நிறைவு செய்வதற்கும் இக்கிராமத்தில் வசிக்கின்ற ஏனைய குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் உங்களான பங்களிப்புக்களை வழங்கி உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.