வறிய மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்து முகமாக வியாபார நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேற்படி வியாபார நிலையமானது மட்டக்களப்பு வந்தாறுமூலைலையில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் வறிய குடும்பங்களை ஒன்றிணைத்து இவ் வருமானத் திட்டமானது ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் வணக்கம் அழகு நிலையம், வணக்கம் குளிரகம், வணக்கம் அழகு சாதனப் பொருட்கள் வாணிபம் என மூன்று பகுதிகளாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
இலங்கையில் உள்ள வறிய மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும்முகமாக Bright Future International நிறுவனமானது பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகின்றது. இந் நிலையில் வருமானத் திட்டங்களை உருவாக்குவதன் மூலம் அவற்றிலிருந்து மேலதிகமாக கிடைக்கப் பெறுகின்ற நிதியினை கொண்டு புதிய திட்டங்களை உருவாக்கி, வறிய மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக இவ்வாறான வருமானத் திட்டங்களை உருவாக்கி வருகின்றது.
இத் திட்டமானது Bright Future International நிறுவனத்தால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட மூன்றாவது வருமானத் திட்டமென்பது குறிப்பிடத்தக்கது.
இத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட கிராம சேவகர், பிரதேசசபை உறுப்பினர்கள், சுகாதார சேவை உத்தியோகத்தர், மத குருமார்கள், தொண்டர்கள், பயனாளிகள் மற்றும் ஆதரவு வழங்கிய மக்கள் அனைவர்க்கும் Bright Future International நிறுவனமானது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதோடு, தொடர்ச்சியாக வறிய மக்களின் துயர் துடைக்க உதவுகின்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் Bright Future International நிறுவனமானது நன்றியினைத் கொள்கின்றது.
குறிப்பாக இவ்வாறான திட்டங்களை தொடர்ச்சியாக நல்ல முறையில் உருவாக்கி வறிய மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கு தொடர்ச்சியாக நிதியுதவி மற்றும் பல்வேறு வழிகளில் ஆதரவினை வழங்கி வருகின்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எந்தவொரு எதிர்பார்ப்புமில்லாது சேவையாற்றுகின்ற தொண்டர்களுக்கும் Bright Future International நிறுவனமானது நன்றியினைத் கொள்வதோடு தொடர்ச்சியான ஆதரவினையும் பங்களிப்பினையும் வழங்குமாறு கேட்டு நிற்கின்றது.