வாழ்வாதாரத்தினை மேம்படுத்துமுகமாக தையல் இயந்திரம் பெற்றுக் கொடுக்கப்பட்டது.
மங்கையற்கரசியின் குடும்பமானது போரினால் பாதிக்கப்பட்ட நிலையில் கிண்ணையடி மட்டக்களப்பு பகுதியில்ம் கல்வி கற்கும் இரு பிள்ளைகளுடன் வசித்துவருகின்றது. இவரது பிள்ளைகளில் ஒருவர் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்று வரும் நிலையில் அப் பிள்ளையின் கல்விச் செலவிற்கு உதவுமாறு கோரப்பட்டிருந்தது. எனவே இக் குடும்பத்தின் வறுமை நிலையினையும் பிள்ளைகளின் கல்வி தேவையினையும் கருத்திலெடுத்து இவர்களுக்கான தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இத் தையல் இயந்திரம் பெற்றுக் கொடுக்கப்பட்டது.
இக் குடும்பத்திற்குரிய தையல் இயந்திரத்தினை பெறுவதற்கு ரூபா (£ 105000 ) வழங்கிய டயானா சூப்பர் ஸ்டோர் உரிமையாளர் திரு அவர்களுக்கு Bright Future International நிறுவனம் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது.