ஆதரவற்ற சிறுவர்களுக்கான உணவு வழங்கி வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு சிலாவத்தை லதனி சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்படுகின்ற ஆதரவற்ற சிறுவர்களுக்கான உணவு வழங்கி வைக்கப்பட்டது. திரு திருமதி ஜெகன் குடும்பத்தினர் தமக்கு இரட்டைக் குழந்தைகளான செல்வன் ஜெ.யாஷ்விகன், செல்வி யாஷ்விகா பிறந்ததை முன்னிட்டு ரூபா 120000 விற்கு பெறுமதியான உணவுப்பொருட்களை Bright Future Intentional நிறுவனத்திற்கூடாக வழங்கி வைத்தனர்.
இவ்வுதவியை வழங்கிய திரு திருமதி ஜெகன் குடும்பத்தினருக்கு Bright Future Intentional நிறுவனமானது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது.
உறவுகளே!
உங்களது பிறந்த தினம், திருமண நாள், மற்றும் ஏனைய நினைவு தினங்களில் இவர்களைப் போன்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கு மற்றும் வறிய குடும்பங்களுக்கு உதவிட விரும்பினால் அதற்கான ஒழுங்குகள் ஏற்படுத்தித் தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.