மட்டக்களப்பு வெருகல் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக ஆடுகள் வழங்கப்பட்டது
மட்டக்களப்பு வெருகல் பகுதியில் வசிக்கின்ற குடும்பங்களுக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் முகமாக பல்வேறு திட்டங்களை நிறுவனமானது முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில் 9 குடும்பங்களுக்குரிய வாழ்வாதாரமாக ஆடுகள் வளர்பதற்குரிய கொட்டகைகளை Bright Future International நிறுவனம் அமைத்துக் கொடுத்திருந்தது. அத்துடன் இவர்களுக்குரிய ஆடுகளை பெற்றுக் கொடுப்பதற்குரிய நிதியினை (ரூபா 400000) பிரித்தானியாவிலிருந்து வழங்கியிருந்தார். இவ்வுதவியினை வழங்கிய ஸ்ரீ ராம் வியாபார நிலைய உரிமையாளர் திரு ராம் அவர்களுக்கு நிறுவனமாமது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது.
இக்கிராம மக்களுக்குரிய உடுப்புகள், 13 குடும்பம்களுக்குரிய வாழ்வாதாரமாக கோழிவளர்ப்பு போன்றவற்றினை பெற்றுக் கொடுத்திருந்ததோடு இவர்களுக்கான குடிநீர் வசதியினையும் Bright Future International நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.