பாலேந்திரனது பிள்ளைகளது கல்வி மேம்பாட்டிற்காக மடிக்கணனி வழங்கி வைக்கப்பட்டது.
திரு பாலேந்திரன் அவர்கள் 6ம் வட்டாரம் வேலணை மேற்கு யாழ்ப்பாணம் எனும் முகவரியில் கல்வி கற்கும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார். இவர் போரினால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு பல்வேறு நோய்களுடன் வாழ்ந்து வருகின்றார். இவரது மனைவியே கூலி வேலைக்கு சென்று இக் குடும்பசெலவு, பிள்ளைகளின் கல்விச் செலவு அனைத்தையும் பார்க்க வேண்டிய நிலையில் உள்ளார். எனவே இவரது பிள்ளைகள் நல்ல கல்விகற்க கூடிய நிலையில் இருந்தும் மடிக்கணனி இல்லாததால் இவர்களது கல்வித் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. அதிகமான கல்வி நடவடிக்கைள் இணைய வழி மூலம் நடைபெறுவதாலும் இவர்களது மேலதிக வகுப்புகள் நீண்ட தூரத்தில் நடப்பதாலும் இவர்களது கல்வி நடவெடிக்கைகள் பாதிக்கப்பட்டு வந்தது.
இவர்களுக்குரிய மடிக்கணணியினை பெற்றுக் கொடுப்பதற்குரிய நிதியினை (ரூபா 135000) New Zealand Auckland பகுதியிலிருந்து வழங்கிய திரு சேரன் ராமநாதன் அவர்களுக்கு Bright Future International நிறுவனமானது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது.