வைரமுத்து நாகராசா குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக பால் மாடு வழங்கி வைக்கப்பட்டது.
கல்லரிப்பு மட்டக்களப்பில் வசிக்கும் வைரமுத்து நாகராசா குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக பால் மாடு வழங்கி வைக்கப்பட்டது. நான்கு பிள்ளைகளுடன் வசித்து வரும் இவர் கூலி வேலைக்கு சென்று கிடைக்கின்ற சிறு வருமானத்தில் தனது குடும்பத்தினை மிக கஸ்ரத்தின் மத்தியில் கவனித்து வருகின்றார்.
எனவே இவரது குடும்ப நிலையினை கருத்தில் கொண்டு இவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கு ரூபா 135000 திற்கு பால் மாடும் கன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
இவர் வெருகல் கிராம மக்களுக்கான குடிநீர் வசத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதற்குரிய நிலத்தினை அன்பளிப்பாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது