ஒட்டு சுட்டான், கற்சிலைமடு பகுதியில் வாழ்வாதாரத்திற்கான தையல் நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கற்சிலைமடு ஒட்டு சுட்டான் பகுதியில் வசித்து வருகின்ற நான்கு குடும்பங்களுக்கான வருமானத்திட்டமாக தையல் நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேற்படி திட்டமானது ரூபா ஓரு லட்ச்சம் 100000 முற்பணமும் மாதாந்த வாடகையாக ரூபா ஆறாயிரம் செலுத்தப்பட்டு அதற்கான கட்டிடம் பெறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இதற்கான தையல் இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்கள், துணிகள் உட்பட அணைத்து தேவையான பொருட்களும் பெறப்பட்டு ரூபா 13 00 000 செலவில் இன்று01.05.2023 ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் இக் குடும்பங்கள் வருமானத்தினை பெற்று தமது வாழ்வாதாரத்தினை மேம்படுத்த முடியுமென்பதோடு பாடசாலை புத்தக பைகள், பெண்களுக்கான கைப்பைகள், பாடசாலை ஆடைகள், ஆடைகள் போன்றவற்றை பெற்றுக் கொள்ள முடியுமென்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.