விவசாயம் செய்வதற்குரிய வேலி அடைப்பதற்குரிய முட்கம்பி பெற்றுக் கொடுக்கப்பட்டது.
கைவேலி முல்லைத்தீவு பகுதியில் வசிக்கும் திரு மோகன சுந்தரம் சின்னத்துரையிற்கு விவசாயம் செய்வதற்கு தேவையான வேலி அமைப்பதற்குரிய முட்கம்பி பெற்றுக் கொடுக்கப்பட்டது. இவர் கல்விகற்கும் மூன்று பிள்ளைகளுடன் போரினால் இரு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றார்.
இதற்குரிய நிதியினை (ரூபா 56000) திரு அலன் டேவிட் அவர்கள் தனது முற்பதாவது பிறந்த தினத்தையிட்டு வழங்கியிருந்தார். எனவே இவருக்கு Bright Future International நிறுவனமானது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.