முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கு மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு மாங்குளம் பகுதியில் உயிரிழை அமைப்பினால் பராமரிக்கப்பட்டு வருகின்றவர்களுக்கு மருந்துப் பொருட்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டது.
இவர்களுக்கான தேவை அளப்பெரியது. இந்த நிலையில் இவர்களுக்குரிய மருத்துவ தேவையென்பது அத்தியாவசியமொன்றாக காணப்படுகின்றது. எனவே இவர்களது தேவையறிந்து இவர்களுக்கான மருந்துப் பொருட்கள் ரூபா 100000 ஒரு லட்சத்திற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டது.
இவ்வுதவியானது இவர்களுக்காக Bright Future International நிறுவனத்திற்கு வழங்கப்படுகின்ற மாதந்தக் கொடுப்பனவிலிருந்து (Standing order) வழங்கப்பட்டது.
இவ்வாறான உதவிகளை வழங்கி ஆதரவுகளை வாங்குபவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ச்சியான உதவிகளை வழங்கி இவர்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உதவுமற்று கேட்டுக் கொள்கின்றோம்.