வெருகல் கல்லரிப்பு கிராம மக்களுக்கான உலர் உணவு வழங்கி வைக்கப்பட்டது
வெருகல் கிராம மக்கள் மிக வறுமையில் வாழ்ந்து வருகின்றார்கள். எந்தவொரு அடிப்படை வசதிகளின்றி வாழும் இம் மக்கள் ஒரு வேலை உணவுத் தேவையினை பூர்த்தி செய்வதற்கே மிக சிரமப்படுகின்றனர். இக்கிராமத்தின் நிலையினை கருத்திலெடுத்த Bright Future International நிறுவனமானது இம்மக்களுக்குரிய வாழ்வாதாரம், ஆடைகள், நீர்தேவைகள், போன்றவற்றினை வழங்கியிருந்தது.
இந்நிலையில் இம்மக்களுக்குரிய நீர்த்தேவையினை பூர்த்தி செய்கின்ற திட்டத்தில் இம்மக்களின் பங்களிப்பினை கருத்தில் கொண்டு இம்மக்களுக்கு ரூபா இரண்டு லட்ச்சத்திற்குரிய உளர் உணவுப் பொருட்களை வழங்கி வைக்கப்பட்டது.