நந்தன் மனோகரன் குடும்பத்திற்கு கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டது.
நந்தன் மனோகரன் குடும்பமானது மறையிலுப்பை நெடுங்கேணி பகுதியில் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகின்றது. இவர் போரில் ஒரு கண்ணை இழந்துள்ளதுடன் உடலில் பலத்த காயங்களுடன் கூலி வேலை செய்து மிகவும் வறுமையில் வாழ்ந்து வருகின்றார். அத்துடன் இவரது ஒரு பிள்ளளையும் நடக்க இயலாத நிலையில் உள்ளது. இப்பிள்ளையின் கால்களை குணப்படுத்த முடியுமென வைத்தியர்கள் கூறியுள்ள போதும் அதற்குரிய நிதி வசதி இல்லாத நிலையில் மிகவும் கஸ்ரத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றார்.
எனவே இவர்களது குடி நீர் தேவை மற்றும் வாழ்வாதாரத்தினை கருத்திலெடுத்து இவர்களது வாழ்வாதாரமாக விவசாயத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவும் குடி நீர் தேவையினை பூர்த்தி செய்வதற்காகவும் ரூபா 300 000 வழங்கப்பட்டு விவசாயக் கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டது.