தீம்புலி, புதுக் குடியிருப்பு, பகுதியிலுள்ள வறிய மக்களுக்கான உலர் உணவு வழங்கி வைக்கப்பட்டது.
திம்புலி, புதுக் குடியிருப்பு பகுதியிலுள்ள அவையவங்களை இழந்த அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான உலர் உணவு வழங்கி வைக்கப்பட்டது. கிராமசேவகரினால் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு தலா 4986 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கான நிதியினை பிரித்தானியாவிலுள்ள S.C.O.T அறக்கட்டளை வழங்கியிருந்தது. இவ்வுதவியினை ரூபா 252300 வழங்கிய S.C.O.T நிறுவனத்திற்கு நிறுவனமானது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.