அம்பாறை திருக்கோவில் பகுதியில் வசிக்கும் மக்களுக்கா குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அம்பாறை திருக்கோயில் பகுதியில் வசிக்கின்ற பல குடும்பங்கள் போரினாலும் பல்வேறு இடர்களினாலும் பாதிக்கப்பட்டு மிக வறிய குடும்பங்களாகவும் கல்வி, பொருளாதார நிலையிலும் காணப்படுகின்றனார்.
அத்துடன் இப்பிரதேசத்தில் வசிக்கின்ற 135 குடும்பங்கள் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்வதற்காக பல மைல் தூரத்திற்கு சென்று தமது அன்றாட குடிநீர் தேவையினை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.
எனவே இம்மக்களினதும் இப்பகுதியில் அமைந்துள்ள அகோரி அம்மன் கோயில் பத்தர்களினது தேவையினையும் நிவர்த்தி செய்யும் பொருட்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதற்காக இப்பகுதியில் நீர் தாங்கி அமைப்பதற்கும், இத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கும் உரிய நிலத்தினை வழங்கிய அகோரி அம்மன் கோயில் நிர்வாகத்தினர், மற்றும் அங்கத்தவர்களுக்கும் Bright future international நிறுவனமானது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது.
இம்மக்களின் தேவையினை தெளிவுபடுத்திய போது உடனடியாக பிரித்தானியாவிலிருந்து நிதி உதவி வழங்கிய திரு மனோச் சிறிராம் வியாபார உரிமையாளர் (ரூபா 200000), திரு பாலகுமாரன் ( ரூபா 202991), திரு சிவறூபன் (ரூபா 102032) ஆகியோருக்கு Bright future international நிறுவனமானது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது. இவ்வாறாக கிடைக்கப் பெற்ற 505023 தவிர மிகுதி Bright Future Ruteraational நிறுவனமானது வழங்கி இத்திட்டத்தினை செயற்படுத்தியிருந்தது.
அத்தோடு குறிப்பாக இத்திட்டம் முழுமை பெறுவதற்கு முன்னின்று செயற்பட்ட திரு நிசாந்தன் அவர்களுக்கும் இதற்கான அனுமதியினை பெறுவதற்கு உதவியவர்களுக்கும், பல்வேறு வழிகளில் உதவிய அனைவருக்கும் குறிப்பாக இத்திட்டத்தினை திறம்பட செயற்படுத்துவதற்கு முன்னின்று உழைத்த இப்பிரதேச மக்கள், கோவில் நிர்வாகம். மற்றும் உறுப்புனர்கள் அனைவருக்கும் இத் திட்ட திறப்பு விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் Bright future Internationale நிறுவனமானது நன்றியினை தெரிவித்து கொள்கின்றது.